Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கும்பகோணத்தில் டாக்டர் மூர்த்தி ரோட்டிலுள்ள ஜலசந்திர மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற இக்கோவில் திருவிழாவில் நேற்று 8ம்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது.
முக்கிய நிகழ்ச்சியான இன்று காவிரி ஆற்றங்கரையில் இருந்த அம்பாள் வேடம் அணிந்து பால்குடம், அலகுகாவடியை வேல் காவடி நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் முக்கிய வீதி வழியாக வீதியுலா வந்து பின்பு கோயில் சென்றடைந்தது.
நாளை 10ம் தேதி இரவு மாரியம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற உள்ளது. நாளை மறுநாள் (11ம்தேதி) அம்மனுக்கு கஞ்சிவார்த்தலும், மாலை அம்மன் வீதியுலாவும் நடைபெறுகிறது.
வருகிற 12 ம்தேதி காலை மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழாக்குழுவினர் தெருவாசிகள் சிறப்பாக செய்துள்ளனர்.